முதுமொழிக் காஞ்சி 40

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
தானோர் இன்புறல் தனிமையிற் றுவ்வாது. 10

துவ்வாப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் தானே இன்புறுதல் வறுமையின் நீங்கி யொழியாது.

பதவுரை: ஓர்தான் - ஒருவன்தான் மாத்திரமே, இன்புறல் - இன்புற்றிருப்பது, தனிமையின் துவ்வாது -வறுமையின் நீங்கியொழியாது.

பொருளுடையவனாய் எவர்க்கும் உதவாமல் தான் மாத்திரமே இன்புற்றிருப்பவன் பொருளில்லாமையால் தனித்துண்ணும் தரித்திரனுக்குச் சமானமாவதன்றி வேறாகான்.

ஒன்றுமில்லாதவன் இரந்து பெற்றதைத் தனியாக உண்பான்: ஆதலால் அவன் வறுமையைத் தனிமை என்று உபசரித்தார்.

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல். 229 ஈகை

பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Mar-18, 4:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 68

சிறந்த கட்டுரைகள்

மேலே