என்னவளுக்கு

என்னவளே
என் வாழ் நாள் முழுதும்
உடன் வர காத்திருப்பவளே

எப்படி சொல்வேனடி உன்னிடம்
நான் கொண்ட காதலை.......
முழுதாய் சொல்லிவிட முயன்று
மேலும் மேலும் தோற்று போகிறேன்


உன் விழிகளால் வீழ்த்தப்பட்டவன்
இன்று உன் இதயத்தில் ஆட்சி செய்கிறேன்

உன் சின்ன சின்ன குறும்புகளிலும் செல்ல சிணுங்கல்களில்
என்னை உன் தந்தையாய் மாற்றி விடுகிறாய்
நிரம்பி வழியும் காதலோடு நீ பார்க்கும்போது
நான் உன் பிள்ளையாய் மாறி போகிறேன்


எனக்கென வாழும் உயிரே
என் கண்ணீர் துடைத்திடும் உன் விரலும்
வலிகள் போக்கிடும் உன்னிதழ் முத்தமும்
சோர்ந்து நான் விழும்போது
தாங்கி பிடித்து தாலாட்டும் உன் மடியும்
எப்போதும் வேண்டுமடி எனக்கு ................

கொஞ்சி நீ பேசும்போதெல்லாம்
உன்னை அள்ளி அணைத்து முத்தமிட துடிக்கிறேன்
எனக்குள்ளே உன்னை உனக்குள்ளே என்னை
முழுதுமாய் புகுத்தி விட நினைக்கிறன்.........


உன் மார்பில் சாய்ந்து மடியில் உறங்கிப்போகும்
தருணத்துக்காய் உயிரோடு வாழ்கிறேன்................

எழுதியவர் : (9-Mar-18, 1:00 pm)
Tanglish : ennavalukku
பார்வை : 145

மேலே