சிரியாவின் களம்

விளையாட்டு களம் கண்ட கண்கள்
போர்க்களம் காணுதே
யார் களம் மாற்றினாரோ
வீரம் என்றே கருதி உன்
குருதி தனை ஏந்தி
தன் பலம் காட்டினாரோ

சோகம் தனை போக்க
தாய்வீடு போகலாம் இன்றதுவும்
சுடுகாடு ஆனதோ
கல்லில் கூட ஈரம் உண்டு
கடவுளே உனக்கு ஏன் இல்லை
அவள் கதரல் கேட்டும் கூட

ஈழத்தில் பிறந்திருந்தால்
என்றோ நீ இறந்திருப்பாய்
சிரியாவில் பிறந்ததால்
இன்று நீ இறக்கிறாய்

சென்று வா
மறுபிறவி எடு ,
சாதியில்லா மதமில்லா
பண வெறியில்லா
பதவி போதையில்லா
தேசமொன்று உன்டெனில்

எழுதியவர் : விஜயகுமார் (13-Mar-18, 11:08 pm)
சேர்த்தது : Vijayakumar K
பார்வை : 157

மேலே