தீயே நீ இனி வராதே

தீபமென்றே நினைத்தோம் காட்டுத்
தீயென மாறினாயே உன்
தாகம்தனை தீர்க்க உயிர்த்
தேகங்களில் ஏறினாயே

கார்த்திகையில் தீப ஒளியாய்
ஐப்பசியில் தீபாவளியாய் உன்னை
கொண்டாடிய கரங்கள் இன்று
உன்னோடு மாய்ந்ததென்ன

ஏன் இந்த கோபம்
யார் செய்த பாவம்
அன்று பிஞ்சுகளின் அலரலாய்
இன்று இளைஞர்களின் அழுகுரலாய்

காட்டை அழித்த தீயே உன்னை
எங்கள் கண்ணீரால்
அனைக்கிறோம்
இன்று போ ...
இனியும் வராதே.

எழுதியவர் : விஜயகுமார் (13-Mar-18, 11:14 pm)
சேர்த்தது : Vijayakumar K
பார்வை : 285

மேலே