நெருப்பின் தாகம்

நெருப்பின் தாகம் !
கவிதை by கவிஞர் பூ.சுப்ரமணியன்
நெருப்பே
உன்னையே தொட்டுப்பார்
சூரியனைத் தீண்டிப் பார்
சுடுமென்று
உனக்கு தெரியும் !

நெருப்பாக
வீட்டில் உணவை ஆக்காமல்
காடு மேடு அலைந்து
உயிரை அழித்து
உன் தாகம் தணிக்கிறாயே !

அழிக்கும்
நெருப்பாக இருந்து
அங்கிங்கு அலைந்து திரிந்து
குரங்கணி காட்டில்
மரம் செடிகொடிகள் மீதும்
மனித உயிர்கள் மீதும்
உனக்கேன் உயிர்த் தாகம்!

நெருப்பில்
கள்ளமில்லா மழலைகளை
கும்பகோண பள்ளியில்
கொன்று குவித்தாயே
உன் தாகம் தணியவில்லையா !

நெருப்பே
உன் தாகம் தணிக்க
ஏழை வீட்டு அடுப்பில்
அணையா விளக்காக இரு !

பூ. சுப்ரமணியன்,
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

எழுதியவர் : பூசுப்ரமணியன் (15-Mar-18, 5:07 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : neruppin thaagam
பார்வை : 108

மேலே