இயற்கை

இயற்கை !!!
சுற்றமுடன் மகிழ்வது சிற்றின்பம் -சுற்று சூழலுடன் வாழ்வது பேரின்பம்
பாரினில் வேண்டும் சுற்றுப்புற தூய்மை !!!
பசுமையுடன் வாழ அதுதானே மேன்மை. !!!

இயற்கை அன்னையின் பிள்ளைகளாம் மரங்கள்
மனித சமுதாயத்தின்
மூன்றாவது கரங்கள்
அன்றாட தேவைக்கு மரங்களின் வேட்டை ?
அதனால் விழுந்தது ஓசோனில் ஓட்டை !!!

மரகத பச்சை ஆடை போர்த்தி !!!
மனிதனை மயக்குவது இயற்கை !!!
மாசற்ற வாழ்வு நல்கி
மண்ணுயிர் காப்பது - பசுமை

மூலிகை தாவரங்களை
முன்னின்று தந்து
மூர்க்க தனத்தை எல்லாம்
முட்டி தள்ளுவது இயற்கை

தொட்டில் தந்து !!!
கட்டிலையும் தந்து !!!
மண்ணையும் காத்து !!!
விண்ணையும் காத்து !!!

உணவை ஈந்து !!!
உறைவிடம் ஈந்து !!!
மாரியை கொடுத்து !!!
பாரியாய் திகழும் !!!
மரத்தை காத்திடு !!!
மண்வளம் போற்றிடு !!!

எழுதியவர் : இரா பாக்கியராஜ் (16-Mar-18, 2:39 pm)
சேர்த்தது : இரா பாக்கியராஜ்
Tanglish : iyarkai
பார்வை : 919

மேலே