இப்படி ஒரு செய்தி ஐயகோ
"தாயில்லாமல் நான் இல்லை "
என்ற பழைய தமிழ் சினிமா பாட்டு
அந்த டி கடையில் அலற அங்கு
பெஞ்சில் அமர்ந்த நபர் ஒருவர்
அன்றைய தமிழ் செய்தித்தாள்
தந்த முதல் பக்க அதிர்ச்சி செய்தி,
" சொத்தில் பங்கு தர மறுத்த
தாயின் தலையை அரிவாளால்
கொய்து போலீசில் மகன்
சரணடைந்தான் சொட்டும் ரத்தத்துடன்
தலை கைப்பற்றி நபரை விசாரிக்கிறது போலீஸ்"
"தாயில்லாமல் நான் இல்லை" என்று
பாட்டும் ஒளிபரப்பில் நின்றது !
கலி முத்தியதோ ................ என்றார் நபர்
செய்தியைப் படித்து அதிர்ச்சியில்.