அழகின் அழகு
நகையை முல்லை சென்று கடன் கேட்கும்
நடையில் அன்னப் படை உடன் தோற்கும்
மேகம் வந்து உன் கூந்தலில் கூடாரமிடும்
மேனியெங்கும் செம் மலர்கள் நர்த்தனமிடும்
பருவம் மடை திறக்கும் பளிங்கு மலைச் சாரல் நீ
வசீகரம் வழிந்தோடும் வண்ண நீரோடை நீ
ஆக்கம்
அஷ்ரப் அலி