ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு

எங்க ஊரு தூத்துக்குடி
"முத்து நகரம்" னு நாடே போற்றும்படி
நாங்க வாழுறோம் உழைச்சு நல்ல படி !


நாங்கள் என்ன பாவம் செய்தோம்
நச்சுக்காற்றை கொண்டு எங்களை
நசுக்குறியே உன் இஷ்டப்படி !

செம்பு உருக்கி காசாக்கி நீ கொண்டு போய்டுவ
மாசு பட்ட காற்றை சுவாசித்து நாங்களெல்லாம்
மண்ணாகில போயிடுவோம் !

நிலத்தடி நீரும் ! காற்றும் நாசமா தானே
போய்டும் !
அப்படியே எங்க உசுரும் ல பொசுக்குன்னு
கொஞ்சம் கொஞ்சமா ல போய்டும் !

செம்பு உருக்குற கம்பெனிக்கு அனுமதி
உனக்கு மேல இருக்கவனுக்கு நீ
"சொம்பு " தூக்குறது உன் தல விதி !

உனக்கு ஒட்டு போட்டம்ல அது எங்க தல விதி !


தூத்துக்குடி மீளவிட்டான் எங்க ஊரு
எங்களை நிம்மதியா வாழ விட்டா போதும் !

எழுதியவர் : கவிஞர் முபா (30-Mar-18, 10:16 am)
பார்வை : 168

மேலே