கற்பின் உயர்தேவி கல்லானாள் சாபத்தால்

அருந்தவ மாமுனிவன் பேரெழில் இல்லாள்
இருள்பிரியா காலையில் இந்திரன் காமத்தால்
கற்பின் உயர்தேவி கல்லானாள் சாபத்தால்
பொற்பெண்ணா னாள்பாதத் தால் .
கவிக்குறிப்பு : அகலிகை சாப நீக்கம்
கவிப்பிரிய வைத்தியநாதனின் விருப்பத்திற்கு இணங்க
ராம நாமத்துடன் இன்னொரு வடிவம் .
அருந்தவ மாமுனிவன் பேரெழில் இல்லாள்
இருள்பிரியா காலையில் இந்திரன் காமத்தால்
கல்லானாள் சாபத்தால் கற்பினள் ராமன்தன்
பாதத்தால் நற்பெண்ணா னாள் .