ஒரு காதல் வந்துச்சோ - பகுதி 5

(சலசலத்து ஓய்ந்த மழை போல் கூட்டம் கலைந்து கொண்டிருந்தது.
வினோத் சுசீலாவின் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தப் படுகிறான்.)

சுசீலா: -------- வினோத், மீட் நவீன் காலேஜ் மேட்ஸ்.

வினோத்: -------- அது சரி.. நவீன் யாரு?

சுசீலா(அசடு வழிந்தபடி): -------- ஐ மெண்ட் கதிர் காலேஜ் மேட்ஸ்.

(இதை நவீன் கவனித்து விட, ஜீரோ வாட்ஸ் பல்பாய் தொங்கியிருந்த அவன் முகம், ஆயிரம் வாட் பல்பாய் ப்ரகாசிக்கிறது.)

வினோத்: -------- எல்லாருக்கும் பாராட்டுக்கள். நிகழ்ச்சிகளும் ரொம்ப அருமையா இருந்தது.

தாமரை: -------- தாங்க்ஸ் வினோத். நீங்க என்ன பண்றீங்க?

வினோத்: -------- பீ.ஈ முடிச்சிட்டு, 'டி.ஈ.' கம்பனில வேலை பண்றேன். ஸ்டைன்லஸ் ஸ்டீல் ராட்ஸ் தயாரிக்கறோம். கேள்விப்பட்டிருப்பீங்களே, கம்பனி பத்தி..

தாமரை: -------- இல்லையே!

வினோத்(கனைத்தபடி): -------- அது தவிர, ட்யூஷன் சொல்லித் தரேன். மாத்ஸ் ட்யூஷன். நீங்க கூட வேணுனா ஜாயின் பண்ணிக்கலாம்.

தாமரை(சிரிப்பை மறைத்தபடி): -------- இல்லை தாங்க்ஸ். நான் பி.ஏ லிட்டரேச்சர் பண்றேன்.

வினோத்: -------- அதுல கூட சந்தேகம்னா வரலாமே. குறிப்பா ஷேக்ஸ்பியரோட plays பத்தி எதாச்சும் டவுட்டுன்னா...

(ரத்னா வருகிறாள்)

ரத்னா:-------- நானும் லிட்டரேச்சர் தான். எனக்கு ட்யூஷன் உண்டா?

வினோத்(உற்சாகத்துடன்): -------- ஓ கட்டாயமா. உங்களுக்கு இல்லாமையா?

சுசீலா(காதருகில்): -------- ரொம்ப வழியாதடா. தொடச்சிக்க.

ரத்னா:-------- ப்ரோக்ராம்ஸ் ரொம்ப நல்லா இருந்திச்சு...உங்களையெல்லாம்
பாராட்டிட்டு போலாம்னு வந்தேன்.

விஜி: -------- தாங்க் யூ ரத்னா. நீங்க எல்லாரும் அமைதியா கோ-ஓபரேட் பண்ணுவீங்கன்னு
நாங்களே நினைக்கலை.

ரத்னா: -------- நான் ஒரு சஜெஷன் குடுக்கலாம்னு இருந்தேன். அடுத்த வருடத்திலெருந்து எல்லாரும் சேர்ந்தே செய்யலாம். எல்லார் கிட்டையும் திறமை இருக்கு, நேரத்தை அதிகமாக்கி ரெண்டு மணி நேர வெரைட்டி எண்டர்டைன்மென்ட் பண்ணலாம். என்ன சொல்றீங்க?

கதிர்: -------- கண்டிப்பா.

(ரத்னா பொதுவாய் புன்னகைத்து விடை பெறுகிறாள்.)

வினோத்: -------- அடுத்த வருடம் ட்ராமா போட்டா, நான் துஷ்யந்தன்... ரத்னாவை சகுந்தலாவா நடிக்கச் சொல்லலாமா? இந்தக் காம்பினேஷன் ரொம்ப வர்க் ஒவுட் ஆகுது.

நவீன்:-------- ரத்னா சகுந்தலான்னா, நான் கூட மறுபடியும் துஷ்யந்தனாக நடிக்கத் தயார்.

( உப்பிய பூரி போல் மலர்ந்திருந்த சுசீலா முகம் லேசாய் சுருங்குகிறது.)

வினோத்: -------- சரி நான் அப்ப கிளம்பறேன். சுசீ நீயும் சுருக்க வந்திடு.

சுசீலா: -------- நீங்க எல்லாரும் இல்லைன்னா இது சக்ஸஸ் ஆகிருக்காது. ரொம்ப நன்றி...ok folks... நேரமாகுது கிளம்பறேன் குப்பு வேற ·போன் பண்ணுவான்.

நவீன்: -------- யாரு குப்பு?

சுசீலா(அலட்சியமாக): -------- என்னோட ஃபியான்ஸ்!

(எல்லோரும் அடுத்தடுத்து கிளம்புகிறார்கள்.)

கதிர் (நவீனிடம்): -------- நான் உன்னை ட்ராப் பண்ணவா?

நவீன்: -------- நோ ப்ராப்ளம். I will take a cab. வெரி எஞ்சாயபிள் டைம். ஆனா இன்னொரு முறை நாடகம்ன்னா என்னைக் கூப்டாத. விக் ஒட்டி எடுக்குறதே பெரும்பாடா போச்சு. (நெஞ்சை நிமிர்த்தியபடி) ஒண்ணு வாடகைக் கடைய மாத்து, இல்லை என்னை மாதிரி கலைஞனை இழக்க வேண்டிவரும்.

கதிர்: -------- இவன் பெரிய சிவாஜி. போடா! இந்த நவீன் இல்லைன்னா ஒரு 'பவீன்' நடிச்சுட்டு போறான்.

நவீன்: -------- செ! நன்றிகெட்ட உலகம். காலைல சூரிய நமஸ்காரம் மாதிரி பண்ணி கால்ல கூட விழுந்த!

('யாரை நம்பி நான் பொறந்தேன்' என்று பாடத் துவங்குகிறான்.)

( கதிர் காதை இறுக்க பொத்திக் கொள்கிறான்)

( மின்மினிப்பூச்சிகள் என்ற எனது வலைப்பூவில் பதித்தது)

எழுதியவர் : ஷக்திப்ரபா (8-Apr-18, 8:54 pm)
சேர்த்தது : Shakthiprabha
பார்வை : 159

மேலே