மிகவும் பிடித்தவர்

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்தவர் தான் ஏ.பி.ஜே அப்துல் கலாம்
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
1)அக்னி சிறகுகள்
2)இந்தியா 2020
3)எழுச்சி தீபங்கள்
4)அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து இயற்கை எய்தினார் .

எழுதியவர் : தமிழன் (9-Apr-18, 4:26 pm)
சேர்த்தது : மகேஸ் தமிழன்
பார்வை : 175

சிறந்த கட்டுரைகள்

மேலே