பண் இரண்டு
பன்னிரண்டு மணிவரை
என்னிரண்டு விழிகளில்..,
வெண்ணிலவு தெரியுதே...
விண்ணளவு தொலைவிலும்
கண்ணிமையின் வளைவினில்,
உன்னினைவு தொடருதே...
எள்ளளவு இடைவெளியில்
சொல்லளவு குறைந்ததால்,
களி களவு போனதே...
நான்கறை உறுப்பும்
சில்லறை உணர்வும்,
வைகறை நெருப்பாகுதே...