பண் இரண்டு

பன்னிரண்டு மணிவரை
என்னிரண்டு‌ விழிகளில்..,
வெண்ணிலவு தெரியுதே...

விண்ணளவு தொலைவிலும்
கண்ணிமையின் வளைவினில்,
உன்னினைவு தொடருதே...

எள்ளளவு இடைவெளியில்
சொல்லளவு குறைந்ததால்,
களி களவு போனதே...

நான்கறை உறுப்பும்
சில்லறை உணர்வும்,
வைகறை நெருப்பாகுதே...

எழுதியவர் : சாய நதி (11-Apr-18, 1:03 am)
பார்வை : 84

மேலே