என் சுவாசக் காற்றே

தள்ளி நின்று என்மீது நீ
புன்னகைப் புஷ்பங்களை
அள்ளி வீசியதும்
வில்லை பூட்டிய உனது
விழிக் கமராவில்
மேலும் கீழும் என்னை
நோக்கி நோக்கி
அச்சுப் பிசகாது
உன்னில் பிரதி செய்ததும்
இன்றும் என் நெஞ்சில்
நிலையாய் நிற்குதடா?

நீ எய்த பார்வை அம்புகள்
என் நெஞ்சைக் கொய்தன,
என்னைக் கொண்டு போய்
பின்பு உன்னோடு
காதலில் நெய்தன,

நான் உன்னில் சாய்ந்தேன்
தினமும் உன்னைக்
காணவே மாய்ந்தேன்!
எனக்கு யேச்சானாய்
பின்பு பேச்சானாய்
என் வாழ்வில் இப்போது
நீ முழு வீச்சானாய்
என் வாழ்வும் நீயடா !
வளமும் நீயடா !
இறுதி வரை நான்
சுவாசிக்கும் மூச்சே நீயடா!

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (15-Apr-18, 4:04 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : en suvasak kaatre
பார்வை : 367

மேலே