இசைமழை...

மேகமென்னும்
மெட்டில் தோன்றி...
மின்னலென்னும்
நரம்பு மீட்ட...
தென்றலோடு
தாளத்திலிணைந்து
இடி என்னும்
இசை கலந்து...
புவியென்னும்
செவியை குளிர்விக்க...
மரமென்னும்
அமைப்பாளனால்...
மண்ணிற்க்கு
அனுப்பப்படும்
பாடலமுதம்...

மழை...!!!

எழுதியவர் : மணிசோமனா ஜெயமுருகன் (16-Apr-18, 10:06 pm)
பார்வை : 51

மேலே