பிரிவு

வீசும் தென்றல்
விட்டுவிட்டு சென்றது
உங்கள் மூச்சி காற்றை!...
யாருடையது என்று
பகுத்தறிய முடியாமல் - நானும்
என் பங்குக்கு ஒரு முறை
உள்ளிழுத்து வெளி விடுகிறேன்,
வெக்கை காற்றை, வேதனை காற்றை......
அது ஒரு முறை கண்ணீர் சொரிந்து,
பிரிவு, பிரிவு என கத்திகொண்டே
சென்றது!......
மனக்கண்ணில் உங்கள் முகம்
தேடி - காற்றில் வரைந்து
பார்க்கிறேன்..
கண்ணுக்கு தெரியாமல்
கரைந்து விட்டீர்கள்...
கரைந்த துளிகள் இதோ
பிரிவு என்னும் தலைப்பின் கீழ்
என் காகிதத்தில் எழுத்துக்களாய் !...

--கவிதா--

எழுதியவர் : கவிதா குமரன் (9-Aug-11, 9:39 pm)
சேர்த்தது : kavitha kumaran
Tanglish : pirivu
பார்வை : 568

மேலே