மனிதன்

வெற்றரையில் பறக்கும் காகிதத்தை பற்றி
முதல் வார்த்தையை அவன் எழுத
அக்காகிதமே சிவப்பு வண்ணம் பூசிக் கொண்டது....
சிவப்பு ஆற்றை ஓட விட்ட அவனோ
கண்ணீர் சிந்தினான்
அன்று கல்வெட்டில் எழுதிய கைகளும்
இன்று கல்லறையில் எழுதும் கைகளும்
ஒன்று தான்...
அவை கரைக் கொண்ட கைகள்
அனைவரையும் காக்க பிறந்தவன்
என்பது மாறி
அனைத்தையும் அழிக்க எழுந்தவன்
என்பதற்கு உதாரணமாய்
திகழ்கிறான்....
" மனிதன்! "

எழுதியவர் : Manjula (30-Apr-18, 11:41 am)
சேர்த்தது : Manjula
Tanglish : manithan
பார்வை : 93

மேலே