அன்னை இன் ஆசி

தவம் இருந்து பெற்றேன் உன்னை
என் செல்லமே!
நீ பிறந்த நொடி உன்னை கண்டேன்
என் செல்லமே !
உன் புன்னகை கண்டு உலகம் மறந்தேன்
என் செல்லமே !
என் உலகமாய் உன்னை நினைத்தேன்
என் செல்லமே !
கவிழ்ந்தாய் தவழ்ந்தாய் நின்றாய்
என் செல்லமே !
ஓடோடி சென்றது ஓராண்டு....
உள்ளம் நெகிழ்ந்தது உன்னை கண்டு...
ஓராண்டு நூறாண்டை மாற உன் அன்னையின் ஆசி
என்றும் உனக்குண்டு என் செல்லமே !என் செல்லமே !

எழுதியவர் : பானுமதி (4-May-18, 3:33 pm)
சேர்த்தது : banu
Tanglish : annai in aasi
பார்வை : 405

மேலே