ரோமர் தைத்த ஈட்டி

நாணங்களை துளைத்து
சதங்களை தாண்டி சென்றது
அச்ச உருண்டைகள்...
பார்ப்பவர் கண்களில்
இனி அது தென்படும்.
இமைகள் கவிழ்ந்தால்
காத்திருந்தது போல்
ஈட்டியாய் குத்துகின்றன
கண்களின் வழி மனதை.
மூடிகள் இதற்கு இல்லை.
இருப்பினும் மூட முடியுமா?
கைகள் மறைக்க
துடித்து பாய்கின்றன
காற்று வந்து கிளற...
காற்றில்தான் அது
கூர் தீட்டும் போலும்!
காற்றில் சிரித்தது.
இருள் வந்தால் போதும்
நிம்மதிதான் எனக்கு
எவருக்கும் தெரியாது.
இப்படி வளருமென்று
யூகிக்க தெரியவில்லை...
பிறர் பார்க்க பார்க்க
மனமெங்கும் இடையறா
கொசுவின் ரீங்கரிப்பு...
நாளை விடியட்டும்
வேண்டாம் இனிமேல்
வெட்டி விடுவோம்...
ஆசையுடன் ஒருமுறை
தடவிப்பார்த்தேன்
மீசையின் நீள் முடியை.

எழுதியவர் : ஸ்பரிசன் (4-May-18, 3:44 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 70

மேலே