முட்கள் மேல் துயில்

வடக்கே தலை வைத்தும்
இட வலம் மாறி மாறி
புரண்டு படுத்தும்
வரும் தடம்
தெரியவில்லை...?
நிமிர்ந்து கிடத்தினால்
முதுகு கிழியும்
கவிழ்ந்து படுக்கையில்
இதயம் கிழிந்து
குருதி வடிவில்
தடங்கலாய்
விழிப்புகள் வந்து சேரும்
துடைத்துவிட்டு
தொடர வேண்டும்...
இந்த முட்படுக்கை
இரணமானது
உறக்கம் தரவில்லை
என்றாலும் உறங்கியே
தீர வேண்டும்
மீண்டும் மறுநாள்
நல்லுறக்கம் யாசித்து...
முயற்சியில் ஒருநாள்
கிடைக்கும்
முகில் மேல் துயில் என..

எழுதியவர் : சுரேஷ் குமார் (8-May-18, 8:20 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 110

மேலே