அன்னை
அன்பின் பிறப்பிடமாம்
இறையின் உயிர்வடிவாம்!
இருட்டறையில் கல்வியறையாம்
வாழும் கலையாவும் போதனையாம்!
சேய்நிலை தாழ்ந்தாலும்
இவள் அன்புநிலை தாழாதாம்!
அமுதுமொழி பேசிடுவாள்
அமுதுணவு ஊட்டிடுவாள்!
உதிரமும் நிறமாறுதே சேயின் பசியாறவே
உணர்வும் மொழியாகுதே
மனம் இன்பத்தின் நதியாகுதே!
தன்மெய் வருத்தி சேய்மெய் வளர்ப்பாள்
சேய் உயிர்வாழ தன்னுயிர் துறப்பாள்!
முதன்மையும் சிறப்பும் இவளே
என் வாழ்க்கை புத்தகத்தில்!
இவளின்றி என் வாழ்வும் சிறப்பாகா!
அன்னையர்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்