ஈடாகுமா
அன்பே!
என் இதயக்கோட்டையின் மணிமகுடமே!!!
என் காதல் சிம்மாசனத்தின் சிங்கார அழகே!!!
வானத்தில் இலட்சம் நிலவுகள்
முளைத்தாலும்
உன் நெற்றி பொட்டுக்கு
ஈடாகுமா....!!!
மண்ணில் கோடி
பூக்கள் பூத்தாலும்
உன் பூஞ்சிரிப்புக்கு
ஈடாகுமா.....!!!
ஏட்டில் எத்தனை
எத்தனை ஆயிரம்
கவிதைகள் எழுதி
வைப்பினும்
உன் எழில் முக
அசைவின் இனிய
மொழிக்கு
ஈடாகுமா......!!!
ஏழு ஸ்வரம் கொண்டு
எட்டு பேர் சேர்ந்து
பதினெட்டு வகை இசைக்கருவிகள்
கொண்டு
பண் இசைத்து
பாடினாலும்
உன் திருவாய் மலர்ந்து
நீ ஒரு வார்த்தை பேச
ஒலிக்கும் இனிமைக்கு
ஈடாகுமா....!!!
உன்னை தூரத்திலிருந்தே
பார்த்து இரசித்தேன்
என் கவிதைகள்
உனக்கு ஈடாகுமா.....!!!
அடியேனின் காதல் ஈடேறுமா....!!!