புதையல் 14

புதையலை அடைய வெகு வேகமாக நடக்க ஆரம்பித்தனர் மூவரும்.
பாதாள பாதை கல்வெட்டின் குறிப்பை கொண்டு சென்று கொண்டிருந்தனர்.திடீரென இரு
பாம்புகள் அவர்கள் போகும் பாதையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
அதை பார்த்ததும் அவர்களுக்கு என்ன செய்வது என அறியாமல் நின்றனர்.
அருகே வேறு வழிகளும் இருப்பதாக
தெரியவில்லை.மேலும் அவர்கள்
வேறு வழியில் சென்றால் வழி தவறி
சென்று விடுவோமோ என பயமும் இருந்தது.அவை மெதுவாக ஊர்ந்து செல்ல அதன் பின் ஐந்து அடி தூரத்தில் பின் தொடர்ந்தனர்.
தீ பந்தங்களும் அவர்கள் கையில் அந்த கல்வெட்டும் இருந்தது.
சரி பாம்புகள் போகட்டும் பின் போவோம் என ஓர் இடத்தில் அமர்ந்தனர்.
உணவு அனைத்தும் தீர்ந்து விட்டது குகையிலே என்ன செய்வது தண்ணீர் கூட இல்லை தாகம் தாங்க முடிய வில்லை.கடைசி சகோதரர் பசி தாங்க மாட்டான்.
பசியும் வயிற்றை கிள்ளுகிறது.
பாம்புகள் போய் விட்டனவா என
பார்த்து கொண்டே பயணித்தனர்.
ஆனால் அது போவது போல தெரியவில்லை.
ஓய்வு எடுத்த இடத்தில் இருந்து கொஞ்சம் தூரம் பயணித்தனர்.
பசியை போக்க என்ன செய்ய என்
யோசித்து கொண்டே வந்த பின் நான்கு வழியாய் பிரிந்தது அந்த பாதை.கல்வெட்டின் குறிப்பில் அந்த இடத்தில் எப்படி செல்ல என குறிப்பு
இல்லாமல் அந்த இடத்தில் ஒரு ஓலை சுவடி வரைந்து இருந்தது.அதை அவர்கள் கவனிக்கவில்லை பசி மயக்கம் தண்ணீர் தாகம் துவண்டு நிலை பாம்புகள் பின்னே சென்று கொண்டிருந்தனர்.
அங்கு ஒரு இடத்தில் பாம்புகள் பொந்தில் நுழைந்ததும் அவர்கள் வேகமாக அந்த பாதாள பாதையின்
முனையில் வந்தனர்.
படிக்கட்டுகள் இருக்க பசி மயக்கத்தில் கடைசி சகோதரர் மயங்கி விழுந்தார்.பின் இரண்டாவது சகோதரரை கவனிக்க சொல்லி விட்டு அங்கே இருக்க செய்து மூத்த சகோதரர் படிக்கட்டில் மேல் சென்று குளம்,நதி பழங்கள் இருக்கின்றனவா என தேடி அலைந்தான்.
கண்ணில் படும் படி எங்கும் குளம் இல்லை வெகு தொலைவில் சென்று
தேடி அலைந்தான்.
பின் ஒரு குளம் ஒன்று பார்த்தான் அதில் தண்ணீரை ஒரு குடுவையில்
பிடித்து கொண்டு தான் வைத்திருந்த துணியை நனைத்து கொண்டான்.
அருகே பழங்களும் இருக்க அவற்றை பறித்து கொண்டு பைகளில் நிரப்பி தம்பிகளை பார்க்க திரும்பினான்.
அங்கே காட்டுவாசிகள் மனிதர்களை கண்டால் உண்டு மகிழ்வர்.
பயந்து போய் ஒரு மர பொந்தில் ஒளிந்து ஒளிந்து பார்த்து கொண்டிருந்தான்.

பசி மயக்கத்தில் கடைசி சகோதரர்
நிலை என்னவாகும்?
மரண பயத்துடன் முதல் சகோதரர்
உயிர் தப்பினார் சென்று விடுவாரா?
இரண்டாவது சகோதரர் தம்பியை காப்பாற்ற அண்ணனை எதிர் பார்த்து வழி அறியாது?
பாம்புகள் வருமோ என பயந்து
ஆபத்தான இடத்தில் அவர் நிலை என்னவோ?
புதையல் செல்லும் வழி தவறோ?
என்ன நடக்கும்?

எழுதியவர் : உமா மணி படைப்பு (3-Jun-18, 11:10 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 73

மேலே