பாடும்ம் பாடித்தொலையும்

ஆயிற்றா...
நூறு இருநூறு
காதல் கவிதைகள்...
வர்ணித்தும் வேண்டியும்
வேள்விகள் வளர்த்தும்...
அடுத்து தாவி விடலாம்.
ஏக்கம் துக்கம்
புளகாங்கிதம் மன்மதம்...
போதும் போதும்
இப்போது சமூகம்...
வெட்டுப்பட்டவர்க்கும்
வெட்டுப்பட போவர்க்கும்...
இரங்கல் என்றால் நல்லது
உச் உச் என்று வாசகர்
முடித்துக்கொள்ள வசதி...
இன்னும் இருக்கிறது
பூமியின் உஷ்ணம்
நாசமான இயற்கை
அறுபட்ட மரத்தின்
அவலம்...விழுதின் சோகம்...
முடித்து விட்டீரா...
வேறு என்ன பாக்கி...
ஆம்...ஆம்...
கவிக்கீறல்,கவிப்பிறாண்டல்...
பட்டம் போட்டுக்கொள்ளும்
அவ்வளவுதான்...ஆயிற்று
இனி நீங்கள் கவிஞர்.

எழுதியவர் : ஸ்பரிசன் (11-Jun-18, 7:58 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 75

மேலே