அழகுக்கு அழகு
பெண்ணை படைத்த பின்
அவளுக்கு அழகு சேர்க்க இந்த இலைகளை படைத்தான் ....
அப்படித்தானோ என்னவோ தெரியவில்லை ...
இல்லை என்றால் நாணத்தால் சிவக்கும் அவளுக்கு
எதற்கு இந்த மருதாணி சிவப்பு
அது என்னவோ அவளுக்கு மட்டும்தான்
இது அழகாக இருக்கிறது
அது ஏன் தெரியுமா ?
அவளுடைய அழகுக்கு முன் தான்
எம்மாத்திரம் என்று அது
நாணப்பட்டதால்...
ஆம் ... நாணத்திற்கும் நாணம் வந்ததால்
வந்த சிவப்பு ....