கற்பக விருட்சம்

தாய் என்பவள் கடவுல் நமக்கு தந்த
கற்பக விருட்சம் ...
ஆம் ...நாம் நினைத்ததை கொடுக்கும்
கற்பக விருட்சம்
ஆனால் நினைக்காமலே கொடுப்பவள் தாய்
அவள் கற்பக விருட்சத்திற்கும் மேல்
நாம் ஏன் யோசிக்க வேண்டும்
யாசிக்க வேண்டும்
எதுவுமே வேண்டாம்
நமக்கு என்ன வேண்டும் என்று
நம் முகத்தை பார்த்து தெரிந்து கொள்வாள்
அது மட்டும் அல்ல
அதற்காக தன உயிரையும் கொடுக்க
தயாராக இருப்பாள்
ஆனால் நாம்தான் அவளை
முதியோர் இல்லத்திற்கு அன்பளிப்பாக
கொடுத்து விடுகிறோம்
அவளால் பட்டை தீட்ட பட்டு
வைரமாய் ஆன பின்
அவளை நாம் துச்சமாய் மதிக்கிறோம் ...
அத்தனை தெய்வங்களும் அவள் வடிவில் வந்தாலும்
அதை கொண்டாட நமக்கு தெரியவில்லை
என்ன ஒரு துரதிர்ஷ்டம் ...
கண்ணுக்கு முன் தெரியும் கடவுளை விட்டுவிட்டு
தெரியாத ஒரு கடவுளை தேடி தேடி ஓடுகிறோம்
ஓடி ஓடி அலைந்தாலும்
ஓய்ந்து நாம் போனாலும்
ஆறுதல் சொல்பவள் அவள்
அவளுக்கு ஒரு ஆறுதலாய்
ஒரு உறுதுணையாய் இனியாவது நாம் இருக்க
முயற்சி செய்வோமா ?