ஏழையின் ஆசை

மாட மாளிகை வேண்டாம்
மழையில் ஓழுகாத வீட்டில் வாழ ஆசை
பல்வேறு வகையான உணவுகள் வேண்டாம்
மூன்று வேளையும் வயிறாற சாப்பிட ஆசை
அழகான ஆடைகள் வேண்டாம்
கிளிசல்கள் இல்லாத ஆடை அணிய ஆசை
பட்ட படிப்புகள் வேண்டாம்
ஆரம்ப கல்வியாவது கற்க ஆசை
மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டாம்
கண்ணீர் இல்லாத வாழ்க்கை வாழ ஆசை
ஆண்டுகள் பல வாழ வேண்டாம்
வாழும் வரை பிறரிடம் கையேந்தாமல் வாழ ஆசை
ஒவ்வொரு நிமிடமும் துன்பத்தினால் துவளும்
இந்த ஏழையின் ஆசை என்றுதான் நிறைவேறுமோ
இறைவா அடுத்தொரு உலகிலாவது ஏழைகளை உருவாக்கும்
உயிர்களை படைக்காமல் இரு - இல்லையெனில்
உலகமும் வேண்டாம் நீயும் வேண்டாம்
உயிர் உள்ளவரை உணர்ச்சியெல்லாமல் வாழ்ந்துவிட்டு போகிறோம் !!!