உன்கிட்ட சொல்லியே ஆகணும்

நீ இல்லா நேரமெல்லாம் தனிமையில் வாடுகிறேன்...

நீ பேசின பேச்சுகளையெல்லாம் கவிதையாக்கி ரசிக்கிறேன்...

நீ சொல்லி அழைக்கையில் என் பெயரின் ஒலி புதுமையாக ஒலிக்கிறது...

நிலவொளியில் பறக்கும் மின்மினிப்பூச்சிகள் உன்னை ஓவியமாய் வரையக் கண்டேன்...

ரோஜா இதழ்கள் உன் ஸ்பரிசத்தின் மென்மையிடம் தோற்றுப்போனது...

உயரப் பறக்கும் பறவைகளெல்லாம் உன்னோடு நான் போகவேண்டிய தூரத்தை சொல்லிக்கொண்டே பறந்தது...

எழுதியவர் : ஜான் (19-Jun-18, 3:47 am)
பார்வை : 383

மேலே