காதலை ஏற்காமல் எப்படி இருப்பேனோ

காதலேன்று நீ சொல்ல
வேணாம் என்று நான் சொல்ல
காத்திருப்பேன் நான் என்று பல
கனவுகளுடன் நீ் இருக்க...
கண்ட உடனே கவர்ந்துவிட்ட உன்னை
காணாமல் நான் இருப்பேனோ...!
காரணம் ஒன்று இருப்பதனால்
கண்டு கொள்ளாமல் நான் இருக்க
கவலையால் நீ வாடுவதேனோ???

கடந்த காலத்தை நான் நினைத்து
கண்ணீர் விட்ட பொழுதுகளால
மனம் வாடி நான் இருக்க
என்னை நாடி வந்த உன்னை
ஏற்காமல் எப்படி தவிர்ப்பெனோ???

எழுதியவர் : தப்ரேஸ் சையத் (20-Jun-18, 2:25 pm)
சேர்த்தது : தப்ரேஸ்
பார்வை : 1077

மேலே