இனிமையான இம்சைகள்

இனிய இம்சைகளால்
இதயத்தை திருடிவிட்டாய்
இந்த தருணத்தை
நினைவுகளால் மாற்றி விட்டாய்...!

என்றும் மாறாத என் கண்மணியின்
குறும்பு செயல்கள், இன்னும்
குறையவில்லையே...
நீ,
என்ன செய்தாலும் உன் மீது உள்ள பாசம்
என்றும் குறைவதும் இல்லையே...!

வாயாடி உன் பேச்சை கேட்டு - பேச வந்த
வார்த்தைகளை மறக்க விட்டாள்...!
சின்ன சின்ன கொஞ்சல்களால்
சிறுபிள்ளையாய் உணர விட்டாள்...!
சிந்திக்க நேரமின்றி,அவள்
சிந்தனையில் சிறகடிக்க விட்டாள்...!!!

எழுதியவர் : தப்ரேஸ் சையத் (20-Jun-18, 2:47 pm)
சேர்த்தது : தப்ரேஸ்
Tanglish : inimaiyana imsaikal
பார்வை : 2839

மேலே