உறங்காமல் ஒரு கனவு

நித்தமும் இரவில்.......
விழியின் விளிம்பில்..........
நீ என்னை ஒற்றை கையில் அணைக்க
நான் நம் காதலை இரு கரங்களில் சுமக்க
உனது கைபேசியில்
நமது குடும்ப புகைப்படம்!
கனவா என்று நினைத்தேன்.......
உறங்கும் முன்பே வருவது கனவா?
இல்லை கற்பனைதான்......
நிஜமும் தோற்று போக
நகைக்கிறேன், கற்பனையை எண்ணி அல்ல
உனக்கும் சேர்த்து நானே காதலிப்பதை நினைத்து.......

எழுதியவர் : chottu vedha (20-Jun-18, 3:46 pm)
பார்வை : 441

மேலே