சித்திரத்தில் அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள்

அந்தப் பழைய வீட்டின்
மச்சிலில் கிடைத்தது
ஒரு பழைய ஓவியம்
தூசி துடைத்தேன்
பளிச்சென்று சிரித்தது ஓவியம் !
வாங்கிய பழைய வீட்டைப்
புதுப்பித்தேன்
வரவேற்பறையில் ஓவியத்தை
மாட்டி வைத்தேன்
வரும் விருந்தினர்கள் நண்பர்கள்
அந்த சித்திரத்தில் அவள் யார்
அதன் சரித்திரம் என்ன
என்று ஆர்வத்தில் கேள்வி கேட்கின்றனர்
அவள் யார் அவளை அந்த ஓவியத்தில்
அவன் ஏன் வரைந்தான் ?
வரைந்த ஓவியன்
டா வின்சியின் சீடனோ அல்லது
ரவி வர்மாவின் சந்ததியோ
எனக்குத் தெரியாது
அந்த சித்திரத்தில் அவள் எனக்காக
தினம் சிரித்துக் கொண்டிருக்கிறாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jun-18, 8:26 am)
பார்வை : 1663

மேலே