வாழ விடு
ஏன் வந்தாய் ?
எதை தேடி வந்தாய்?
உன்னை பிரிந்த அன்றே
என் உயிரும் பிரிந்ததென்றறியாமல்
நீ இல்லாத
இந்த வாழ்வில்
இமை அறியாமல்
அழ கற்று கொண்டேன்
சந்தோசம் இல்லாமல்
சிரிக்க கற்று கொண்டேன்
உயிரில்லாமல்
உலவ கற்று கொண்டேன்
உன் காதலால்
மீண்டும் உயிரூட்ட எண்ணாதே
என்னை
பிணமாகவே வாழ விடு