பிடிபடாத காலம்
நிதானப்படுத்தப்பட்ட
காலங்களில்
மீறிப் போனக் கனவுகள்
தொல்லைகளை
நிதானமாகக் கொடுத்து
கெடுத்துச்சென்ற நினைவலைகள்
மின்னும் வர்ணங்களில்
ஒளிந்து போனக் காரணங்கள்
சரளமாக
சரிந்து போன
காதல் சுவடின்
அறிகுறிகள்
எல்லாவற்றையும்
திரட்டி வைக்கிறேன்
கவிதைகளின்
முதல் வாசலில்.....................................