பெற்றால் தான் அன்னையா

எங்களின் அன்னை
பசியுடன் வந்தோம்
அன்னம் இட்டாய்

பிறருடன் பேச வேண்டும் என்றேம்
தொலைபேசியைத் தந்தாய்

எங்களை ஊர் சுற்றுகிறார்கள் என்றார்கள்
நீயோ உலகம் சுற்றுவார்கள் என்றாய்

திருந்த மாட்டார்கள் என்றார்கள்
நாளை உலகினை திருத்துவார்கள் என்றாய்

தோல்விகளால் துவண்டிருந்தோம்
உன் அன்பினால் மறுபிறவி எடுத்தோம்

நம்பிக்கை அளித்தாய்
நாங்கள் சாதித்தோம்

எங்களால் பறக்க முடியும் என்றாய்
இன்றோ விடாமல் பறந்து கொண்டிருக்கிறோம்

அன்று நீ சொன்னது "எல்லாம் சாத்தியம்"
இன்று நடந்ததோ "மாபெரும் சாகசம்"
"
நம்பிக்கை, அன்பு, பரிவு காட்டிய நீயும்
எங்களின் அன்னையே

ராரே

எழுதியவர் : ராரே (19-Jul-18, 6:13 am)
பார்வை : 343

மேலே