அனுபவம்

ஜடத் துகள்களாய் இருந்த என்னை
உருண்டைப் பிடித்து அதற்கு உயிரும் கொடுத்து
கண்மூடி நுழைந்தேன் இவ்வுலகில் குருதிப் படிந்து
ஆசை பேதம் க்ரோதம் போன்றவை
அறியாது அம்மணமாய் இருந்தது என் மனம்
கோபம் தெரியவில்லை உள்நோக்கமோ புரியவில்லை
பாஷை பழக்கமில்லை என் தேவையோ விளங்கவில்லை
என் போல் இருந்த "பெரிய" மனிதர்கள் வாயில்
கண்வழிக் கற்றேன் செவிவழிக் கேட்டேன் பின்பு
அவர் நடந்தப் பாதையில் நடைப் பயிர்ந்தெழுந்தேன்
எண்ணங்கள் தோன்ற அவை ஆசைகள் தூண்ட
முன் பின்ப் பார்த்து ஊர்வழி சென்றேன்
இவ்வழி சென்றால் இக்கணிக் கிடைக்கும் என்று புரிந்து
பலவழி சென்றேன் பல வினைப் புரிந்தேன்
புத்தி வளர்ந்தது பல யுத்திக் கிடைத்தது
ஆசை மடியினிலே எதிர்பார்ப்பும் பிறந்தது
ஏமாற்றங்கள் ருசித்தேன் பல தோல்விகளும் புசித்தேன்
துக்கம் கடந்து சந்தோஷம் உணர்ந்தேன்
என் வழிகள் குறுகியது வலிகள் இறுகியது
பயணம் தொடங்கியது இந்த நேர் செல்லும் பாதையில் ....

எழுதியவர் : ரா.சா (23-Jul-18, 5:44 am)
சேர்த்தது : ராசா
Tanglish : anupavam
பார்வை : 1575

மேலே