என்னவனே என் இனியவனே
என்னவனே எனக்கினியவனே
இன்னும் ஏன் தயக்கம் உனக்கு
நீ சொல்வாயே 'மாந்தளிர் கன்னங்கள் '
அந்த கன்னங்கள் இங்கே இதோ
ஏங்குகின்றனவே உனக்காக
ஆழ்கடல் மட்டம்போல அதில்
நீ மூழ்கிடலாம் முத்துகுளிக்கலாம்
முத்துக்குடுத்து முத்தெடுக்கலாம்
முத்து முத்தாய் ............
உன் இஷ்டம்போல் இது உனக்குரிமை
இன்னும் காலம் தாழ்த்தாதே
காத்திருக்கேனே இங்கு
உன்னவள் நான் இலவங்கிளி போல்