என்னவனே என் இனியவனே

என்னவனே எனக்கினியவனே
இன்னும் ஏன் தயக்கம் உனக்கு
நீ சொல்வாயே 'மாந்தளிர் கன்னங்கள் '
அந்த கன்னங்கள் இங்கே இதோ
ஏங்குகின்றனவே உனக்காக
ஆழ்கடல் மட்டம்போல அதில்
நீ மூழ்கிடலாம் முத்துகுளிக்கலாம்
முத்துக்குடுத்து முத்தெடுக்கலாம்
முத்து முத்தாய் ............
உன் இஷ்டம்போல் இது உனக்குரிமை
இன்னும் காலம் தாழ்த்தாதே
காத்திருக்கேனே இங்கு
உன்னவள் நான் இலவங்கிளி போல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Aug-18, 4:44 am)
பார்வை : 147

மேலே