நம்பிக்கைப் பூ

புன்னகையில் பூத்த மலர்
தோட்டத்தில் புதுவரவு
பூத்துச் சிரித்து வாடி உதிர்ந்த மலர்
நேற்றைய நினைவு
மொட்டாய் முகிழ்த்து காத்து நிற்கும் மலர்
நாளையக் கனவு
வருந்துவதும் இல்லை
வாடி நிற்பதும் இல்லை தோட்டம் !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Aug-18, 3:21 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 326

மேலே