குறுநகை புரிந்து அந்தியில் வந்த கருங்கூந்தல்காரி

குறுநகை புரிந்து அவளும் அந்தியில்
கருங்கூந்தல் காற்றில் அசைந்து மிதந்திட
கடற்கரை யோரம் கைகாட்டி நடந்துவர
கதிரவனும் கையசைத்து மேற்கே விடைபெற
காத்திருந்த காதலன் அவளைப்பார்த் தெழுந்தான்
காதலர் கைகோர்த்து நடக்க
கடலலையும் மகிழ்ந்து அவர்கள்கால் தழுவியதே !

கவிப்பிரிய வே .ஆ --வேலாயுதம் ஆவுடையப்பன் தந்த குறுந்தொகை விளக்கப் பதிவில் நான் தந்த கவிதை .
காதல் குறும்பா கபிலரின் குறுந்தொகைப் பாடல் இலக்கண
வழியில் தந்திருக்கிறேன் . இரண்டு கவிதைகளும் ஈற்றயலடி முச்சீர் கொண்டு
மற்றவை நாற்சீர் அளவடிகளால் அமைந்த நேரிசை ஆசிரியப்பாவாகும் .

எழுதியவர் : கவின் சாரலன் (8-Aug-18, 5:31 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே