உயிரெழுத்தானவள்

அன்பே அருமை காதலி
ஆனாய் இரவில் பேரொளி
இன்பம் எதிலே கூறடி
ஈன்றால் உணர்வாய் நீயடி
உலகில் உள்ள தாய்மொழி
ஊமை காரணம் உன் விழி
எந்தன் இதயம் மேலடி
ஏறி அமர்ந்தாய் ஏனடி
ஐந்து உயிர்களும் உன்னடி
ஒன்றாய் சமர்ப்பணம் காணடி
ஓரம் கண்ணில் தானடி
ஓளவை வழிந்தாள் அதன்வழி
ஆயுதம் துடிக்கும் மனக்குழி ...
ச.ஜார்ஜ்

எழுதியவர் : ச.ஜார்ஜ் ராஜரத்தினம் (8-Aug-18, 10:09 pm)
பார்வை : 351

மேலே