அடியே அன்புக் குந்தானி கடிதப் பதிவு

அடியே அன்புக் குந்தானி
========================
(கடிதப் பதிவு)

எல்லாத்தையும்
அழகால சித்தரிக்கலாம்,
அழகால மட்டும் பார்க்கலாம்,
உணரலாம்,
என்னைப்பொறுத்தவரைமட்டும் புரிஞ்சுக்கிறேன்னு
எதன் பின்னாலேயோத் திரிவதைவிட உணர்ந்தாலே போதும் ..
எல்லாத்தையும் உணர்ந்தாலே போதும்தானே, ஒரு அழுகையை , ஒரு சிரிப்பை ,
ஒரு அனிச்சையை , கண்ணசைவை,
பூக்கள் பூக்கிற மீயொலியைக்கூட,
கேக்க முடியுமா என்ன
புரிஞ்சுக்க முடியுமா என்ன ..
உணரத்தானே முடியும் ,
அப்படி எல்லாத்தையுமே
உணர்ந்தாலே பாதிப் பிரச்னை தீரும் ..
யாரையும் யாராலயும் புரிஞ்சுக்க முடியாது ஆனா உணரலாம்,
அவங்களை அவங்களா வச்சி ,
அந்த இடத்திலேயே வச்சி
உணரலாந்தானே ம்ம் ..
ஸோ நீ என் உணர்வு

ஒண்ணு சொல்லவா
இதை சொன்னப்பறம்
கோவத்தாலேயோ வெட்கத்தாலேயோ
சிவக்கப்போகும் உன் வதனத்தை
என்னிடமிருந்து மறைக்கத்தான் போகிறாய்
பரவாயில்லை
சொல்லவருவதை சொல்லிடறேன்
ப்ப்ப்ப்பா நீ செம்ம்ம ஃபிகர் ம்ம்
இத ஏன் இப்போ சொல்றேன்னா ..
அடுத்து சொல்ல வாய்ப்பு
அமையுமோ அமையாதோ தெரியாது ம்ம் சந்தர்பம் அமையும்போ
சொல்லிடனும் ரசிச்சிடனும் ..
ஏன்னா நான் ரசிக்க,
இனி உன்னைமாதிரி ஒரு மலர்
என் தோட்டத்தில் பூக்குமா இல்லையா ன்னு எனக்குத் தெரியாதே
அதான் சொல்லிட்டேன் ம்ம்

உன்கிட்ட எதையும் சொல்லாதே
உன்னை ரசிக்கிறேன்னு
இழந்த நேரங்கள் தான் அதிகம்
நாட்கள் ஆக ஆக
வேறு யாருக்கோ நீ சொந்தமாகிடுவியோ
என்கிற பயம்
உன்னைவிட நானும் என் கண்களும்
அழகா இல்லையே என்கிற
தாழ்வு மனப்பான்மை
எதையும் சொல்லாமே
தாமதிக்கிறபோதெல்லாம்
ஓடாத நிமிடங்களுக்குள்
என் வயசும்
கூடிகிட்டே போறமாதிரி இருக்கு.
கண்ணாடியைப் பார்க்கிறப்போ ஏற்படுகிற தன்னம்பிக்கை
வெளிய இறங்கி
அழகா இருக்கிற யாரையோப் பார்க்கும் போதும்
அறைக்குள்ளார போயி
அடைப்பிட்டுட்டு
விழி மிரள பூத்திருக்கும்
உன் புகைப் படத்தைப் பார்க்கும்போதும்
எங்கேயோ காணாம போயிடுது
சந்தர்பம் கிடைக்கும்போ வாழ்ந்துடனும்
இனி இந்த நொடி
எப்போதும் கிடைக்காம போயிடலாம் .. எல்லோரும் நீயாகிட முடியுமா ..
எல்லோருடைய கண்களும்
உன்னுடைய கண்களாகிட முடியுமா ம்ம் .. உறக்கம் கெடுக்கும் கண்கள்
உனக்கல்லவா படைத்துவிட்டான் ..
இறைவன் இரக்கமில்லாதவன்தான் .. யாருடனும் ஒப்பிட முடியாத
பெயர்த்தெரியாத மலர் நீ ..
உன் வாசனையும் அப்படித்தான் .. சொல்லிவிட்டேன் ம்ம்
பை போறேன் ம்ம்

கோபம் வருதா ம்ம்
இப்பொவே கோச்சிக்கோ,
திட்டணும்போல இருக்கா ம்ம்
இப்பொவே திட்டிடு
எதையும் அடுத்தவேளைக்குன்னு
மிச்சம் சேர்க்காதே
நான் பிறந்தது முதல், இதுவரை,
உன் மாதிரி அழகை
கண்டதில்லை
எனக்கு அம்மா இல்லை
ஒருவேளை இருந்திருந்தால்
எங்கம்மாதான் எனக்கு முதல் அழகி,
நீ இரண்டாவதுதான்
நான் கண்டவரை
இப்பவரைக்கும்
நீதான் ப்ரதி நித்யப் பெளர்ணமி.
இப்படியே எப்போதும் ஜொலிச்சிக்கிட்டே இரு.
எங்கோ உன் பின்னாலிருந்து
ஓர் ஓரமா நின்னு
உன் கண்களுக்குப் புலப்படாமே
பார்த்து ரசிச்சிட்டுப் போயிடறேன்.
என்றென்றைக்குமான
உன் நாள்போக்கு
சந்தோஷங்களால் சூழ்ந்திருக்கட்டும்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (23-Aug-18, 8:56 pm)
பார்வை : 126

மேலே