எண்ண அலைகள்

கோபமோ, காமமோ , சோகமோ ,
சலனமில்லா மனதில்
விழுந்த ஒற்றை எண்ணம் ,
முடிவில்லா அதிர்வலைகளாய்
மூச்சினில் தொடங்கி
முகத்தினில் தொடர்ந்து
இதயத்தில் படர்ந்து
உடலெங்கும் ரத்த நாளத்தில்
கடந்து நகர்கிறது ...
தெளிந்த நீரில் எறிந்த கல்லால்
வந்த முடிவிலா வட்டங்கள் பொல்.

எழுதியவர் : (24-Aug-18, 4:30 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 43

மேலே