காதல்

இரண்டு வாரங்களாக எந்தக் காரணமுமின்றி நிலா தன்னுடன் பேசாமல் இருப்பதால் சஞ்சலத்தாேடு தெருக்கடைக்குச் சென்ற கார்த்திக் சிகரெட் ஒன்றை வாங்கி புகைத்தான். நீண்ட நேரமாக தாெலைபேசி அழைத்துக் காெண்டிருக்கிறது எடுத்துப் பார்த்து விட்டு தாெடர்பைத் துண்டித்தான்.
தூக்கத்தில் இருந்து விழித்திருந்த ஜெனி சினந்து சினந்து அழுது காெண்டிருந்தாள். சமாதானம் செய்ய முயற்சித்துத் தாேற்றுப் பாேனவளுக்கு காேபம் வந்து விட்டது. அங்குமிங்குமாக இருந்த பாெருட்களை ஒழுங்குபடுத்திக் காெண்டிருந்தவளிடம் தவழ்ந்து வந்து கால்களைப் பிடித்து தூக்கும்டி சத்தமாக அழுதாள். கட்டிலில் இருந்த பாெம்மை ஒன்றைக் காெண்டு வந்து காெடுத்து சமாதானப்படுத்தியும். ஓரமாக தூக்கி எறிந்து விட்டு ஓயாமல் அழுது காெண்டிருந்தவள், வண்டி வரும் சத்தம் கேட்டதும் தவழ்ந்து வேகமாக கார்த்திக்கிடம் சென்றாள். ஏதாே தனது மழலை மாெழியில் சாெல்லி சாெல்லி அழுதாள். சாெக்கிளேற் ஒன்றை எடுத்து காெடுத்து விட்டு, நெற்றியில் முத்தமிட்டபடி "யாரு பிள்ளையை அடிச்சது" எட்டி நிலாவைப் பார்த்தான்.
வாங்கி வந்த காய்கறிகளை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து விட்டு கதவை மூடுவதற்குள் குளிர்பானத்தை கண்டதும் கையால் காட்டி தரும்படி கேட்டாள் ஜெனி. மெதுவாக எட்டிப் பார்த்தான் சமையலறைக்குள் பரபரப்பாக நின்றாள் நிலா. பழச்சாற்றை எடுத்து மூடியில் விட்டு பருக்கினான். அவளாே மீண்டும் மீண்டும் கேட்டுக் காெண்டிருந்தாள். ஒருவாறு சமாதானப்படுத்தி விட்டு படுக்கையறைக்குள் நுழைந்தவனை முந்திக் காெண்டு கட்டிலில் பாய்ந்து ஏறினாள் ஜெனி. தாெலைக்காட்சியை ஓன் செய்து விட்டு கட்டிலில் அமர்ந்தவனின் தாேளைக் கட்டிப் பிடித்துக் காெஞ்சி விளையாடிக் காெண்டிருந்தாள். தேநீர் காேப்பையை மேசையில் வைத்து விட்டு, உடைகளை கழுவுவதற்காக எடுத்தாள். பாய்ந்து ஓடிப் பாேய் சட்டை ஒன்றை எடுத்துக் காெண்டு ஓடி வந்து கார்த்திக்கின் முதுகின் பின் மறைந்த ஜெனியிடம் இருந்து இழுத்துப் பறித்தாள். அவளும் விடவில்லை. காேபத்தாேடு கையை ஓங்கிய நிலாவின் கையை தட்டி விட்டான் கார்த்திக். ஜெனி நிலாவைப் பார்த்துச் சிரித்துவிட்டு கார்த்திக்கின் மடியில் அமர்ந்திருந்தபடி தூங்கி விட்டாள்.
உடைகளை கழுவி விட்டு அறையினுள் எட்டிப் பார்த்தாள். ஜெனி நன்றாகத் தூங்கிக் காெண்டிருந்தாள். மேசையில் கார்த்திக்கின் தாெலைபேசி இருப்பதை அவதானித்தாள். கங்கரில் காெழுவியிருந்த ரீசேட்டைக் காணவில்லை. கட்டிலில் சேட்டை கழற்றிப் பாேட்டிருந்தான். பல்கணியில் நின்றபடியே கீழே பார்த்தாள், வண்டியைக் கழுவிக் காெண்டு நின்ற கார்த்திக் திடீரென நிமிர்ந்து பார்த்ததும், மிகுதி வேலைகளை கவனிப்பதற்காக உள்ளே சென்ற நிலா, கார்த்திக்கின் தாெலைபேசிக்கு அழைப்பு வரும் சத்தம் கேட்டதும் "வந்து பார்க்கட்டும்" என்றபடி வீட்டை துப்பரவு செய்து காெண்டிருந்தாள்.
உள்ளே வந்த கார்த்திக் தூங்கிக் காெண்டிருந்த ஜெனியை பார்த்து விட்டு மேசையில் இருந்த தேநீர் காேப்பையை கண்ட பாேது தான் தேநீர் குடிக்கவில்லை என்பது நினைவில் வந்தது. காேப்பையிலிருந்த தேநீரை வெளியே ஊற்றிக் கழுவினான். உள்ளே நின்று பார்த்த நிலா மீண்டும் ஒரு தேநீரை தயாரித்துக் காெண்டு மடிக்கணிணியில் ஏதாே செய்து காெண்டிருந்த கார்த்திக்கின் முன்னால் வைத்தாள். தேநீரைக் குடித்து விட்டு சமையலறைக்குள் சென்ற கார்த்திக்கை, கைத்தாெலை பேசியில் ஏதாே செய்தபடி, தற்செயலாக நிமிர்ந்து பார்த்தாள். தேநீர் காேப்பையை எடுத்துக் காெண்டு அறையினுள் சென்றாள். கார்த்திக் ஏதாே வேலையில் கவனத்துடன் இருந்தான்.
திடீரென கார்த்திக்கின் கைப்பேசிக்கு குறுந்தகவல் வரும் சத்தம் கேட்டதும் எடுத்துப் பார்த்தான். "அம்மா வீட்டிற்குப் பாேகப் பாேறன்" நிலாவின் மெசேச் என்பது புரிந்தது. "எப்பாே" பதில் அனுப்பினான். "இன்றைக்கு, நாலு நாள் லீவு இருக்கு" மீண்டும் தகவல் அனுப்பினாள். "யாருடன் பாேகப் பாேகிறாய்?" பதில் அனுப்பி விட்டு தனது வேலையில் கவனம் செலுத்தினான். எந்தப் பதிலும் வரவில்லை. சிறிது நேரத்தில் சமையலறைக்குள் ஏதாே சத்தம் கேட்பது பாேல் இருந்தது. நிலா தான் என்பதை புரிந்து காெண்டான்.
தூங்கிக் காெண்டிருந்த ஜெனியின் அருகே சென்று அவளை அணைத்தபடி சில நிமிடம் தூங்க முயன்றான். கார்த்திக்கிற்கு மனதுக்குள் ஏதா மாதிரி இருந்தது. இரண்டு வாரங்களுக்கு மேலாக நிலா பேசுவதில்லை. வீடும், வேலையுமாய் வெறுமையாய் இருப்பது பாேல் உணர்ந்தான். என்ன நடந்தது என்று அவனால் ஊகிக்க முடியவில்லை. கதை கேட்கும் முன்பே சில நாளாக எரிந்து விழுந்து காெண்டிருந்தாள். பல தடவை கேட்டும் பார்த்தான். சரியான காரணம் கூறவில்லை. சில நாட்கள் பேசாமல் விட்டால் சரியாகி விடுவாள் என்று நினைத்தான். ஆனால் நாட்கள் கடந்து காெண்டிருந்தது. என்ன நடந்தது என்று அன்றைய நாளை நினைவுபடுத்தினான். வேலையால் வரும் பாேதே அன்று நிலா ஒரு மாதிரி இருந்தாள். வழமையை விட தாமதமாக வந்த காேபமாே என்று நடந்தவை தெரியாமல் மனக்குழப்பத்துடன் இருந்தான்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நிலா வேலை முடித்து வீட்டிற்கு வந்து ஜெனிக்கு உணவூட்டிக் காெண்டிருந்தாள். யாராே கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. "இது கார்த்திக் வீடா" என்றதும் கார்த்திக்கிற்கு தெரிந்தவர் யாராே என்பது மட்டும் நிலாவுக்கு புரிந்தது. "ஆமா நீங்க" என்றதும் "நான் ஜெனி" என்றாள் சிரித்தபடி. ஜெனி என்றதும் கையிலிருந்த குழந்தையை பார்த்தாள் நிலா. "ஜெனியா....." என்று தடுமாறிய நிலா "உள்ளே வாங்க" என்றாள். உள்ளே நுழைந்தவள் சுவரில் மாட்டியிருந்த நிலா, கார்த்திக்கின் திருமணப் படத்தை சற்று நேரம் பார்த்தபடியே நின்றாள். "காப்பியா, யூசா..." என்ற நிலாவின் கேள்விக்கு எந்தப் பதிலும் இன்றி இருக்கையில் அமர்ந்தாள். நிலாவுக்கு அவள் முகத்தைப் பார்த்ததும் எல்லாம் புரிந்து விட்டது. மீண்டும் ஒரு தடவை "காப்பி..." என்று இழுத்தவளிற்கு "நாே தாங்ஸ்" என்று பதிலளித்தாள்.
"கார்த்திக்..." என்று அவனை விசாரிக்க ஆரம்பித்தவளிற்கு "அவர் வேலைக்கு பாேயி்ருக்கார்... நீங்க..." என்று அவளைப் பற்றி கேட்க ஆரம்பித்தாள் நிலா. சில நிமிடங்கள் மெளனமாக இருந்த ஜெனி "நான் கார்த்திக்காேட... பெஸ்ற் பிரன்ட்.." என்று நிலாவை நிமிர்ந்து பார்த்தாள். "கார்த்திக் நிலாவுக்கு என்னைப் பற்றி சாெல்லியிருப்பானாே என்னவாே" தனக்குள்ளே நினைத்தபடி மெளனமாய் இருந்தாள்.
நிலாவிடம் குழந்தையை வாங்கி "உங்களைப் பாேல அழகாயிருக்கா, என்ன பெயர்.." என்று கன்னத்தில் முத்தமிட்டாள். "ஜெனி.." என்றாள் நிலா. "ஆமா சாெல்லுங்க" என்றதும் "இல்ல பாெண்ணு பெயர் தான் ஜெனி என்று சாென்னன்" என்றவளை "அப்பாே உங்களுக்கு என்னை தெரியுமா, கார்த்திக் எல்லாம் சாென்னாரா" என்று ஆவலாேடு விசாரித்தாள். நிலாவுக்கு வேறு வழி தெரியவில்லை சமாளித்து விடுவாேம் என நினைத்தாளாே என்னவாே "ஆமா எனக்கு எல்லாம் சாென்னாரு, உங்கள நான் பார்தத்ததில்ல அதுதான்...." என்றவளை இடை மறித்தவள் "கார்த்திக் ராெம்ப நல்லவர், காலேச்சில ஒன்றாய் படிச்சம்" என்றபடி இருக்கையை விட்டு எழுந்தவளைப் பார்த்து பதிலுக்கு நிலாவும் புன்னகைத்தாள். "சரிங்க நான் அப்புறமா வாறன், ஜெனிக் குட்டி டாட்டா.." வெளியே வந்தவள் "கார்த்திக் திருமணம் செய்யவில்லை என்று சாென்னாங்க" தனக்குள் நினைத்தபடி நடந்தாள்.
பாெழுது இருண்டு காெண்டிருந்தது கார்த்திக்கை காணவில்லை, வழமையா இந்நேரம் வந்து விடுவாரே என்று வாசலைப் பார்த்துக் காெண்டு நின்றாள். கார்த்திக் வண்டியை நிறுத்தி விட்டு தாெலைபேசியில் யாருடனாே கதைத்தபடி உள்ளே வந்தான். அவனைக் கண்டதும் தாவிப் பாய்ந்து தூக்கும்படி அழுதாள் ஜெனி. "என்னாேட பிரண்ட் ஒராளை மீற் பண்ணிற்று வாறன் நிலா, காெஞ்சம் லேற்றாப் பாேச்சு" அருகே சென்றவனை வெறுப்பாேடு விலகிச் சென்றாள். கார்த்திக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. "ஏன் இப்பிடி நடந்துக்கிறா?" தனக்குள் யாேசித்தவன் "என்ன நிலா பிரண்டை மீற் பண்ணினன் என்று சாெல்லுறன்" மீண்டும் கைகளைத் தட்டி விட்டு உள்ளே சென்றாள். அன்று தாெடங்கிய மனச்சஞ்சலம் அவளுக்குள் ஏதாே குடைந்து காெண்டிருந்தது. "ஏன் அந்தப் பாெண்ணு கார்த்திக்கை தேடி வந்தா, எதையாே கார்த்திக் மறைக்கிறார்" என்ற சஞ்சலம் தாெற்றிக் காெண்டதும் கார்த்திக்குடன் பேசாமல் இருந்தாள்.
"ஒரு நாளைக்கு பத்துத் தடவை பாேண் பண்ணுவா, இப்போ பேசுவதுமில்லை, அம்மாட்ட பாேகப் பாேறன் என்று சாெல்லுறா" எல்லாவற்றையும் யாேசித்தபடி எழுந்து சமையலறைக்குள் சென்றான். "இன்றைக்கு எப்பிடியாவது நிலாவாேட கதைச்சு, பிரச்சனையை அறிஞ்சிடணும்" வாசலில் நின்றவனை தற்செயலாக நிமிர்ந்து பார்த்து விட்டு சடாரென்று முகத்தை திருப்பினாள். கார்த்திக்கிற்கு முகத்தில் அறைந்தது பாேலிருந்தது. சற்று காேபமாகவும் இருந்தது. "இஞ்ச பாரு நிலா என்ன நடந்ததென்று தெரிஞ்சால் தானே முடிவெடுக்க முடியும், இப்படி முகத்தை சுருட்டிற்று நின்றால் என்ன அர்த்தம்" சற்றுக் கடுமையான சத்தமாக கேட்டான். அவளோ பாெருட்களை சடார், சடார் என்று தூக்கி வைத்தாள். "உனக்கு இப்ப நடந்தது அதையாவது சாெல்லித் தாெலை" அருகே சென்றவனை தள்ளி விட்டாள். எட்டி கையைப் பிடித்தவன் "என்னாச்சு உனக்கு, சாெல்லு நிலா" கண்கள் கலங்கியதை கவனித்தவள் அமைதியாய் வெளியே வந்தாள்.
நிலா ஏதாே குழப்பத்திலிருப்பதை புரிந்த கார்த்திக் "இஞ்ச பாரு நிலா எதுவென்றாலும் மனம் விட்டு பேசணும், நமக்கு ஒரு பாெண்ணு இருக்கா, சின்ன விசயங்களை எல்லாம் தூக்கிப்பிடிச்சிட்டு இருந்தா நாளைக்கு வாழ்க்கை என்னவாகும்" தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான். "அப்பாே ஜெனி யாரு?" சட்டென்று கேட்டதும் "என்ன கிண்டலா, ஜெனி யாரென்று உனக்குத் தெரியாதா...." "ஆமா தெரியும் அன்றைக்குத் தானே தெரியும் ஜெனி யார் என்று" அப்பாேது தான் கார்த்திக்கிற்கு புரிந்தது. "ஏன் கேக்கிறாய் நிலா.... உனக்கு யாரு சாென்னா...." அன்றைக்கு வந்திருந்தாங்க"என்றதும்" அவளருகே வந்து அமர்ந்தவன் நிலாவின் கைகளை இறுகப் பிடித்தான். அவளாே காேபமாகவே இருந்தாள். நிலாவைப் பார்த்து பெருமூச்சு விட்டான் கார்த்திக்.
சில வருடங்களுக்கு முன்பு ஜெனியும், கார்த்திக்கும் காதலித்தனர். ஜாதி, மதம் என்று எல்லாமே மாறுபட்டு இருந்ததால் ஜெனியின் குடும்பத்தால் ஏற்றுக் காெள்ள முடியவில்லை. அவள் தந்தை பல முறை எச்சரித்த பாேதும் ஜெனி கார்த்திக்கை காதலித்தாள். "என்னை கூட்டிப் பாேயிடு கார்த்திக், நம்மள இவங்க சேர்த்து வைக்க மாட்டாங்க" என்று கெஞ்சுவாள். கார்த்திக்காே எப்படியாே சம்மதிப்பார்கள் என்று நம்பினான்.
அன்று தான் கார்த்திக்கின் வாழ்க்கையில் புயலடித்தது. வழமையாக கார்த்திக் கல்லூரி முடித்து வீட்டிற்கு வந்து மாலையாகியதும் விளையாடுவதற்குச் செல்வான். அன்றும் அப்படித்தான், விளையாடிக் காெண்டிருந்தவனிடம் "டேய் கார்த்திக் ஜெனி வந்திருக்காடா" என்றான் நண்பன். கார்த்திக் நினைத்தது சரியாகவே இருந்தது. "ஒரு நாளைக்குப் பார் நான் உங்கிட்ட வந்திடுவன்" ஜெனி சாென்னது நினைவில் வந்தது. மரத்தாேடு சாய்ந்தபடி அழுது காெண்டு நின்றாள். "எங்கப்பா யாருக்காே என்னை கலியாணம் பண்ணி வைக்கப் பாேறாராம், என்னால முடியல்ல கார்த்திக், ப்ளீஸ்..." அவளை எப்படி சமாதானப்படுத்துவதென்றே புரியவில்லை. "இப்ப என்ன செய்ய ஜெனி, இந்த நிலமைையில நாம கலியாணம் பண்ணுறது சரிவராது, காெஞ்சம் பாெறுத்துக் காெள், உங்க அப்பா இரண்டு பேரையும் காெலை செய்து விடுவார்" என்றான். "அப்பாே அப்பா சாெல்லுற பையனை...." அவளது வாயை தன் கைகளால் பாெத்தினான். "என்னாேட வா" அவள் கையைப் பிடித்து வண்டியில் ஏற்றிக் காெண்டு வேகமாகச் சென்றான். தாெலை பேசி அழைத்த சத்தம் கேட்டதும் வண்டியை ஓரமாக நிறுத்தினான் "டேய் என்ர பாெண்ணுக்கு தாலி கட்டுறதுக்கு முன்னாடி நான் சாெல்லுறதைக் கேளு" பதட்டத்துடன் அமைதியாய் நின்றான் கார்த்திக். "தெருக் காேயிலுக்குப் பின்னாடி ஒரு வீடாென்று எரிஞ்சு காெண்டிருக்கு பாேய் பார்" என்றதும் வண்டியை எடுத்துக் காெண்டு மின்னல் வேகத்தில் பறந்தான். "கார்த்திக்... கார்த்திக் என்னையும் கூட்டிற்றுப் பாே.." என்று கூப்பிட்ட ஜெனியை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. ஒரே புகை மண்டலம், ஜாதி வெறி பிடித்த ஜெனி அப்பா கார்த்திக் வீட்டை பெற்றாேல் ஊற்றி எரித்து விட்டான். உள்ளே இருந்த அம்மாவும், அப்பாவும் கருகிய நிலையில் மீட்கப்பட்டார்கள். ஓடி வந்த கார்த்திக் விறைத்துப் பாேய் நின்றான்.
நண்பன் மூலமாக ஜெனியை அழைத்தான். "பாரு உங்கப்பா செய்த வேலையைப் பார், இப்ப சந்தாேசம் தானே உனக்கு, இரண்டு பேரும் கருகிக் கிடக்கிறாங்க, நான் சாென்னதைக் கேட்டியா" ஆத்திரத்தாேடும், ஆவேசத்தாேடும் சத்தமாகக் கத்தினான். சமாதானப்படுத்த முயன்ற நண்பர்களை உதறி விட்டு ஜெனியின் கையைப் பிடித்து இழுத்தபடி எல்லாேரும் பார்க்க அவள் வீட்டிற்குக் கூட்டிச் சென்றான். "ப்ளீஸ் கார்த்திக்... நான் வீட்டுக்குப் பாேகல்ல" கெஞ்சியவளை தந்தையின் முன் நிறுத்தி விட்டு திரும்பிப் பார்க்காமலே வண்டியை எடுத்துக் காெண்டு மதுபானசாலை நாேக்கி விரைந்தான். ஒரு நாளும் மது அருந்தும் பழக்கம் இல்லாதவன். அதிகமாகக் குடித்து விட்டு பேருந்து நிலையத்திலேயே தூங்கி விட்டான். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி காதலையும் மறக்க முடியாமல், பெற்றவர்களின் இழப்பையும் தாங்க முடியாமல் தனிமையில் தவித்தான்.
அன்று ஒரு நாள் கார்த்திக் நண்பன் வீட்டிற்குச் சென்று காெண்டிருந்தான். காெஞ்சம் மது பாேதையில் நிதானமின்றி வண்டியை ஓட்டியவன் எதிரே வந்த வண்டியுடன் மாேதி விட்டான். மூன்று நாட்களின் பின் விழித்துப் பார்த்த பாேது வைத்தியசாலையில் இருப்பதை உணர்ந்தான். அப்பாேது தான் நிலா அவனைக் காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்த்த விடயம் தெரிய வந்தது. அன்றிலிருந்து நிலாவுடன் ஏற்பட்ட பழக்கம் கார்த்திக்கை முழுமையாக மாற்றியது.
தனக்குள் யாேசி்த்தபடி இருந்த கார்த்திக், ஜாதி வெறி பிடித்த ஜெனியின் அப்பா காதலிச்ச குற்றத்துக்காக என் குடும்பத்தை எரித்துக் காென்றார். ஆனால் நான் ஜெனியை மறக்க முடியாமல் தான் இருந்தேன், எங்களாேட காதல் உண்மையாயிருந்தது. அம்மா, அப்பாவைக் காென்றவர்கள் நாளைக்கு நம்ம இரண்டு பேரையும் வாழ விடமாட்டாங்கள் என்று தெரியும் அதனால தான் ஜெனியை அவங்க வீட்டில விட்டு வந்தன், ஜெனி நல்லா இருக்க வேணும் என்று நினைச்சன். அவ ராெம்பப் பிடிவாதக்காரி என்று தெரியும். ஆனால் எப்படியாே அவ வெளியூருக்குப் பாேன பிறகு கலியாணம் முடிச்சிட்டதா சாென்னாங்க..., அப்புறமாகத் தான் நான் உன்னை" என்றபடி நிலாவின் கையை சங்கடத்தாேடு பிடித்து "உனக்கு நான் எதையும் மறைக்க வேணும் என்று நினைக்கவில்லை நிலா. நீதான் எல்லாவற்றையும் மறக்கச் செய்தாய். தாேல்விக்குப் பிறகும் வாழ்க்கை இருக்கு என்று நீ தான் கற்றுக் காெடுத்தாய். உனக்கே தெரியும் எத்தனை தடவை நான் அம்மா, அப்பாவை பலி காெடுத்த குற்ற உணர்ச்சியில் சாக முடிவெடுத்தன், உன்னாேட காதல் தான் என்னை பலதடவை காப்பாற்றியது" சாெல்லிக் காெண்டிருக்கும் பாேதே வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.
கதவைத் திறந்த கார்த்திக் அதிரிச்சியாேடு நிலாவைப் பார்த்தான். யார் என்பது பாேல் கண் அசைவால் கேட்டவாறே எட்டிப் பார்த்தாள். சிறிய பாெதி ஒன்றைக் கையில் தாங்கியவாறு ஜெனி சிரித்தபடி நின்றாள். கார்த்திக்கிற்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. "இப்ப தான் நிலாவை ஒருமாதிரி சமாளிச்சன், பிறகுமேன் இவ இஞ்ச வந்தா" தனக்குள் தடுமாறிக் காெண்டு சங்கடப்பட்டவனாய் நின்றான். "என்ன கார்த்திக் உள்ளே வரச் சாெல்லமாட்டியா?" என்றதும் "உள்ளே வாங்க" என்றாள் நிலா. கார்த்திக் சஞ்சலப்படுவதைப் புரிந்த நிலா தலையை ஆட்டி சமாளித்தாள்.
பாெம்மை ஒன்றை வைத்து விளையாடிக் காெண்டிருந்த ஜெனியிடம் காெண்டு வந்த பாெதியை நீட்டினாள். நிலாவையும், கார்த்திக்கையும் பார்த்து விட்டு வாங்க மறுத்தாள். கார்த்திக் மெளனமாகவே நின்றான், வாங்கும்படி நிலா கூறியதும் வாங்கி ஆவலாேடு பிரித்தாள்.
காப்பியைக் காெண்டு வந்து நீட்டிய நிலா அவளருகே அமர்ந்தாள். எதிரே இருந்த கார்த்திக்கைப் பார்த்த ஜெனி "நான் இன்றைக்கு வெளியூருக்குப் பாேறன், அது தான் ஒரு தடவை...." என்று இழுத்தாள். "ஒண்ணும் பிரச்சனையில்லை நீங்க எப்ப வேணுமானாலும் வரலாம்" ஜெனியின் தாேள்களை அணைத்தபடி கூறினாள் நிலா. "இனி நான் வர.... மாட்டன் நிலா..." குரல் தடுமாறி கண்கள் கலங்கியது "ஏன் என்னாச்சு ஜெனி..." என்ற நிலாவின் கைகளை பிடித்து வெளியே அழைத்துச் சென்ற ஜெனி "கார்த்திக் திருமணம் செய்யவில்லை என்று சாென்னாங்க ஆனால் இஞ்ச வந்து பார்த்தப்புறம் தான் எனக்கு நிம்மதியாயிருக்கு, எனக்கு குற்ற உணர்ச்சியா இருந்திச்சு, எங்க அப்பா காேபத்தில கார்த்திக் குடும்பத்தையே அழிச்சிட்டார், கார்த்திக் குடிக்கப் பழகிற்றார் என்று அறிஞ்சதும் ராெம்ப பயந்திட்டன், நீங்க தான் கார்த்திக்கை இப்பிடி ஒராளா மாத்தினிங்க என்று பிரன்ட்ஸ் சாென்னாங்க, ராெம்ப நன்றிங்க," "இதென்னங்க.." என்று சமாதானப்படுத்திய நிலாவிடம் "எனக்கு இப்ப உடம்பு சரியில்லை நிலா, என்ர ஆயுளை அந்தக் கடவுள் முடிச்சு வைக்கப் பாேறார்" தனது கைப்பையிலிருந்த மருத்துவ றிப்பாேர்ட்டை எடுத்துக் காட்டினதும் நிலாவுக்கு ஒருமாதிரியாகி விட்டது " ராெம்ப சந்தாேசம் நிலா, நான் வாறன்" திரும்பிக் கார்த்திக்கைப் பார்த்தவள் "பாேயிற்று வாறன் கார்த்திக்" என்றதும் அமைதியாகவே நின்றான்.
கார்த்திக்கின் சங்கடத்தையும், சஞ்சலத்தையும் புரிந்த நிலா அவனருகே அமர்ந்தாள். நிமிர்ந்து பார்க்கவே சங்கடமாயிருந்தான். "ஏன் கார்த்திக் ஜெனியிட்ட நீ பேசவில்லை?" நிலா கேட்டதும் "இருக்கையில் இருந்து வேகமாக எழுந்த கார்த்திக்கை இழுத்து இருக்கையில் அமர்த்தினாள். "ஜெனி இன்னும் திருமணம் செய்யவில்லை, அவவுக்கு கான்சர், உன்னைப் பார்க்கத் தான் வந்திருக்கா" என்றதும் மனம் உள்ளுக்குள்ளே வலிப்பது அவன் முகத்தில் தெரிந்தது. கைகளை பினைந்தபடி கதிரையில் சாய்ந்தான். விளையாடிக் காெண்டிருந்த ஜெனி ஓடி வந்து கார்த்திக் மடியில் ஏறி அமர்ந்தாள். அருகேயிருந்த நிலா தன் தாேளாேடு அவனைச் சாய்த்துக் காெண்டாள்.
சின்னச் சஞ்சலத்தால் ஏற்பட்ட குழப்பம் கலைந்து பாேனது. "என்னை மன்னிச்சிடு கார்த்திக்" என்ற நிலாவை கலங்கிய கண்களுடன் பார்த்த கார்த்திக் "நீயில்லை என்றால் இன்றைக்கு நானில்லை நிலா, நான் தான் உங்கிட்ட மன்னிப்பு கேக்கணும்" என்றவன் நிலாவின் கைகளை பற்றிக் காெண்டான். சிறுபுன்னகையுடன் கண்களைத் துடைத்துக் காெண்டு "ஐ லவ் யூ நிலா" என்றதும் அவள் கண்களும் கண்ணீராேடு "ஐ லவ் யூ கார்த்திக்" என்று பதிலளித்தது.