வரம்

என் கண்மணியின் முதற் சோம்பலும்
அம்முழுமதியை இரவு தாண்டி தங்கவைக்குமே!

வேகம் அடங்கிய​ இளந்தென்றலோ அவள் ஒற்றை முடி
நெற்றியில் விழும் அழகு காண​ வீசத்துவங்குமே!

அவள் கால் கொலுசின் இசை கேட்க
கடல் அலையும் கரை சேருமே!

என் கோதை அவள் பேச்சு கேட்டு
செந்தமிழும் பெருமை கொள்ளுமே!

என் மதியழகி வதனம் கண்டு
அந்த​ சந்திரனும் வெட்கிக் கரையுமே!

அவள் கூந்தல் அடைந்து மோட்சம் பெற​
குறிஞ்சியும் பன்னிரெண்டு ஆண்டு தவம் புரியுமே!

அவள் கண்களின் ஒளி கண்டு தாளாமல்
விண்மீன்களும் போட்டி போடுமே!

பார்கடலுக்கும் சந்திரனுக்கும் ஏன்….
அத்தவம் புரிந்த​ குறிஞ்சிக்கும் கிட்டாத​ பாக்கியம்
என்னவளின் காதலினால் எனக்குக் கிட்டியதும்
நான் பெற்ற​ வரம் அல்லவோ!!

எழுதியவர் : பூர்ணி கவி (4-Sep-18, 7:51 pm)
சேர்த்தது : பூர்ணி கவி
Tanglish : varam
பார்வை : 245

மேலே