கர்மவீரர் காமராசர்

விருதையில் விழுதாய் உதித்துத் தழைத்து

கருமரமாய் நினது சுயத்தடம் பதித்தாய் !

அடியோ னடைந்துக் கடந்தப் பேந்துயரை

இனியெவனோனையும் அண்டாமல் காத்தாய் !

எச்சிகரம் எட்டினும் தற்குடிப் பிறழாமல்

இச்சையான உடைமையற்று துற. வாழ்ந்தாய் !

கறையாய் கரைந்த இருள் ளுலகில்

உன்பறையால் எத்திசைக்கும் விதிவிலக்கானாய் !

உனை நினைவு கூரமாட்டோ மென்றும்

நினைவுச் சின்னமாய் நினைந்துப் போற்றுவோம் !



உழனும் உழுதுண்டு பெருவாழ்வு வாழ

உயரணைகள் பலத்தடுத்து வாழ வகையமைத்தாய் !

கல்லேனாயினும் சிறப்பறிந்து தனதெதிர்த் தலைமை

கற்றறிந்திட பலப்பாடச் சாலைக்கு வித்திட்டாய் !

முக்கண் ணுடையோனே னந்தாதி யாயினும்

எக்கண் திறந்த. யாமே முழுமுதலானாய் !

யெமை ஈன்றால் ஓரிருர் சிறுப் பேரிடலாம்

உமை ஈன்றதால் இவ்வுலமே பேரடைந்த ஐயா !

ஆதவனாய் தினந்தோன்றி மறையாமல் நின்றாயென்றும்

அடியோர் நெஞ்சத்தில் “ கல்விக் கண்” செம்மலாய் !



- கர்மனின் அடியோனாய்

மா- சங்கர்

எழுதியவர் : மா.சங்கர் (4-Sep-18, 11:12 pm)
சேர்த்தது : ச ங் க ர் ராஜா
பார்வை : 144

மேலே