வருவாயா எனக்காக

கோடி பெண்கள் கூடி பேசினால் கூட
உன் குரல் மட்டும் என் காதினில் இசை போல கேட்கிறது ......
உன் சிறு புன்னகை என்னை அடியோடு கொல்கிறது ...
நீ கண்சிமிட்டும் அந்த நொடிப்பொழுது என் இதயம் நின்று துடிக்கிறது அன்பே ....

கடல் கடந்து சென்றால் கூட என் காதல் ஒரு பொழுதும் பொய்யாகாது ....
உன் மீது படும் காற்று கூட என் காதலை உன்னிடம் கூறும் அன்பே ....
நீ பிரிந்து சென்றதனால் தான் என்னவோ
கன்னி உன் நினைவுகள் பிரியாமல் என்னிடம் இருக்கிறது ...

ஒரு நொடி பொழுது நான் பிரிந்தால் கூட உன் உயிரை விடும் அளவு என் மீது காதல் கொள்ள வேண்டாமடி நீ .......
ஒரு நொடி கூட பிரியாமல் நீ என்னுடன் இருந்தாலே போதும் என் உயிர் உன்னை சுற்றியே இருக்கும் என்றும் .........
என்றென்றும் உனக்காக .....
உனக்காக .......மட்டுமே...............

எழுதியவர் : saeel nashy (6-Sep-18, 5:35 pm)
சேர்த்தது : Saeel Nashy
பார்வை : 276

மேலே