பள்ளியெழுச்சி

ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலில் அலைஅலையாய் அணிவகுக்கும்
நீர்ப்பரப்பின் மேலுதித்து நிலமெங்கும் கால்பதித்து
தேர்ப்புரவி துள்ளிவர செங்கதிர்கள் சிதறிவிழப்
போர்த்திருக்கும் பச்சைவண்ணப் புல்வெளியில் பனிபறக்க
சோர்ந்திருந்த பறவையினம் சுறுசுறுப்பாய்ச் சுற்றிவர
ஊர்ப்புறமும் காலடிகள் உலவுவது கேட்கலையோ
ஈர்த்திழுக்கும் இருவிழிகள் இளைப்பாற நேரமில்லை
வார்த்தெடுத்த பொன்சிலையே விழிதிறந்து எழுவாயே

எழுதியவர் : நாகேந்திரன் (8-Sep-18, 12:18 pm)
சேர்த்தது : நாகேந்திரன்
பார்வை : 261

மேலே