விடியலை எதிர்நோக்கி

வயல்களில்
வரப்புகளில்
நடந்த கால்கள்
ஒடுங்கி ஓய்ந்தன
உழுதிட உதவிய
காளைகளை காணவில்லை
எலிவளைகள் இடம்
பெயர்ந்துவிட்டன
நிறமிழந்து
நிலைமாறிய
மண்ணின் மதிப்பு
மாறியது
விவசாயி வாழ்ந்த
இடம் வட்டவழிச்
சாலையானது
நட்ட நடு சாலையில்
நாதியற்று நிற்கிறான்
அன்னமிட்ட விவசாயி !
கவலைக் கொள்வார்
எவருமில்லை
விழியிருந்தும்
பார்வையற்ற அரசுகள் !
கோட்டையை சுரண்டிடும்
சுயநலக் கூட்டம்... !
விடையிலா விடுகதை
மக்களின் நிலை
விடியலை எதிர்நோக்கி
விரக்தியுடன் வாக்காளர்கள்... !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (15-Sep-18, 7:33 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 683

மேலே