சமகாலம் உருவாகட்டும்
எதிர்வினை ஆற்றுவதால்
எதிர்மறைச் சொற்கள்
பிறந்தது இயல்பெனில் ,
நேர்மறை சொற்கள்
இருந்தும் என்ன பயன்
இந்த பூமியில் ?
ஒன்று புரிகிறது ...
நேர்மறையும்
எதிர்மறையும்
மோதிக்கொள்ளும்
காலம் தொலைவில் இல்லை !
அதிலாவது
தோன்றட்டும்
சமத்துவம் ?
அக்காலம்
இக்காலம்
கலிகாலம்
என்பதைப்போல
கற்காலம்
தற்காலம்
என்பதைப்போல
சமகாலம்
மனிதம் வாழும் காலம்
என்று ஒன்று
உருவாகட்டும் !
பழனி குமார்
15.09.2018
( படத்திற்கும் வரிகளுக்கும் தொடர்பில்லை)