சமகாலம் உருவாகட்டும்

எதிர்வினை ஆற்றுவதால்
எதிர்மறைச் சொற்கள்
பிறந்தது இயல்பெனில் ,

நேர்மறை சொற்கள்
இருந்தும் என்ன பயன்
இந்த பூமியில் ?

ஒன்று புரிகிறது ...

நேர்மறையும்
எதிர்மறையும்
மோதிக்கொள்ளும்
காலம் தொலைவில் இல்லை !

அதிலாவது
தோன்றட்டும்
சமத்துவம் ?

அக்காலம்
இக்காலம்
கலிகாலம்

என்பதைப்போல

கற்காலம்
தற்காலம்

என்பதைப்போல

சமகாலம்
மனிதம் வாழும் காலம்
என்று ஒன்று
உருவாகட்டும் !

பழனி குமார்
15.09.2018

( படத்திற்கும் வரிகளுக்கும் தொடர்பில்லை)

எழுதியவர் : பழனி குமார் (15-Sep-18, 3:12 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 273

மேலே