மொட்டை மாடி உலா..
என் முகத்தில் பட்டு கிழியும்
காற்று என் காதோரம் உரசி
எதோ ரகசியம்
பேசுகிறது ...
இத்தருணத்தில் வானத்தில்
வட்டமிடும் பறவை
கானமழை
பொழிகிறது..
எங்கோ மாடுகளின்
கழுத்தின் மணி ஒலிக்கும்
சப்தம் காற்றோடு
என் காதுகளை
இடரும்..
மயங்கிய சூரியனை
தத்தெடுத்து கொண்டது
கார்முகில்...
கண்ணுக்கெட்டிய தூரம்
வரை பச்சை கம்பளம்
விரித்து போல்
புல்வெளி...
இத்தருணத்தில் என் விரலை
இடரும் ஒற்றை
எறும்பு ....
பால் வண்ணத்தை
விழுங்கியது போல
நீலத்தை தொலைத்து இருந்த
வானம்...
காகம் கரையும்
சப்தம் லேசாக
என் இட காதோரம்..
மொட்டை மாடி
தனில் ஒற்றையாய் நான் கண்ட
காட்சிகள் இவை,,,,,,